திருச்சி : திருச்சி கலெக்டர், சிறந்த தேர்தல் அதிகாரிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி கலெக்டர் சிவராஜ், வாக்காளர் சேர்ப்பில் புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளில் திறம்பட செயல்பட்டதால், மாநில அளவில், சிறந்த தேர்தல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், கலெக்டர் சிவராஜ், சிறந்த தேர்தல் அதிகாரிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை, இரண்டாவது இடத்தையும், கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண் குராலா, மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE