அன்னூர்: கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி, அதிமுக தொண்டர் வீட்டில் தேநீர் அருந்தி, அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது அப்பகுதி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முதல்வர் பழனிசாமி, கோவையில் 2வது நாளாக பிரசாரம் மேற்கொண்டார். புலியகுளத்தில் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை துவங்கிய முதல்வர் பல இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

வழியில், கரையான்பாளையம் பகுதியில் தனது காரை நிறுத்திய முதல்வர் முதல்வர் பழனிசாமி அங்குள்ள ஆதிதிராவிடர் காலனிக்கு சென்றார். அங்குள்ள அருந்தததியர் பிரிவை சேர்ந்த மலரவன் என்ற அதிமுக தொண்டர் வீட்டிற்கு சென்று தேநீர் அருந்தினார். சிறிது நேரம், மலரவனுடன் பேசிவிட்டு, அந்த பகுதியில் இருந்த கோவிலிலும் சாமிதரிசனம் செய்தார். அமைச்சர் வேலுமணியும் உடன் சென்றார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரளாக கூடினர். முதல்வர் வருகை தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE