புதுடில்லி: மக்கள் மத்தியில் வாக்களிப்பதன் முக்கியம் மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்க பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய வாக்காளர் தினமான இன்று பிரதமர் மோடி அவரது டுவிட்டரில்;
தேசிய வாக்காளர் தினம் என்பது நமது ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் தேர்தல்களை சீராக நடத்துவதை உறுதிப்படுத்தவும் செய்கிறது. தேர்தல் ஆணையத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பாராட்டும் ஒரு சந்தர்ப்பமாகும். வாக்காளர் ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான ஒரு நாள் இது.

குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
National Voters Day is an occasion to appreciate the remarkable contribution of the EC to strengthen our democratic fabric and ensure smooth conduct of elections. This is also a day to spread awareness on the need of ensuring voter registration, particularly among the youth.
— Narendra Modi (@narendramodi) January 25, 2021
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE