கரூர்: பிரதமர் மோடி, சீனா என்ற வார்த்தையைக்கூட சொல்லமுடியாதவராக, தைரியமற்றவராக இருக்கிறார் என காங்., எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி.,யும், முன்னாள் தலைவருமான ராகுல், தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 3வது நாளாக இன்று (ஜன.,25) கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ராகுல் பேசியதாவது:
அனைத்து இந்திய மக்களும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். பிரதமர் மோடி தனக்கு விரிந்த மார்பு இருப்பதாக கூறி பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால் சீன ராணுவம் இன்று இந்திய எல்லைக்குள் அமர்ந்திருக்கிறது. 1000 கி.மீ இந்திய எல்லை சீன ராணுவத்தால் கைப்பற்றியுள்ளது

பிரதமர் மோடி, சீனா என்ற வார்த்தையைக்கூட சொல்லமுடியாதவராக, தைரியமற்றவராக இருக்கிறார். கடந்த 4 மாதங்களாக சீனா என்ற வார்த்தையை அவர் எங்கும் உச்சரித்ததே கிடையாது. சீனா இந்தியாவில் நுழைந்தபோது அப்படியாரும் வரவில்லை என மோடி பொய் சொன்னார். சில நாட்களுக்கு பிறகு சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் இருப்பதை இந்திய ராணுவ அமைச்சரும், இந்திய ராணுவமும் ஒப்புக்கொண்டார்கள். மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியதாலும், மக்களை பிரித்தாழ்வதாலும்தான் சீன ராணுவத்திற்கு இந்தியாவிற்குள் நுழைவதற்கான தைரியம் வந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், கரூர் பேருந்துநிலையம் பகுதியிலும் பிரசாரம் செய்தார். அதனை தொடர்ந்து, கரூர் வாங்கல் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE