சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் உள்பட தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜனாதிபதி காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், இன்ஸ்பெக்டர் மணிகண்ட பிரபு ஆகிய 3 பேருக்கு ஜனாதிபதியின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பேரின் மெச்சத்தகுந்த பணியை பாராட்டி ஜனாதிபதியின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தை சேர்ந்த 17 போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு இந்திய காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்பு இடம்பெற்றிருக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE