புதுடில்லி: டில்லியில் 60 நாட்களாக நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என வேளாண்துறை அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார்.

நாளை விவசாயிகள் ஒரு லட்சம் டிராக்டர் பேரணியை நடத்துகிறார்கள். மத்திய அரசு இதற்கு கடுமையான பாதுகாப்பை வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எப்போது முடிவு
இந் நிலையில் விவசாயிகள் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், ''விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்'' என்றார்.
ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டம் வாபஸ் என விவசாயிகள் தெரிவித்துதுள்ளனர். அதேவேளையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE