புதுடில்லி :வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், டில்லியில் இன்று பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தவுள்ளனர்; இதில், ௫௦௦ பெண்களும் பங்கேற்க உள்ளனர்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினமான இன்று, டில்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர்.
![]()
|
இது குறித்து, விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது:டிராக்டர் பேரணியில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பங்கேற்க உள்ளன. அதில், ௫௦௦ பெண்களும் பங்கேற்பர். டிராக்டர்களை பெண்களும் ஓட்டுவர்.குடியரசு தின விழா முடிந்த பிறகே, எங்களுடைய பேரணி துவங்கும். அதனால், குடியரசு தின விழாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அமைதியான முறையில் பேரணி நடைபெறும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள், இந்தப் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஏராளமான விவசாயிகள் டில்லி எல்லையில் டிராக்டர்களுடன் குவிந்துள்ளனர்.பட்ஜெட் தினத்தில் போராட்டம்விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளதாவது:டிராக்டர் பேரணி, எங்களுடைய வலிமையை அரசுக்கு காட்டுவதாக இருக்கும். எங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், வரும், பிப்., ௧ல், பட்ஜெட் தாக்கலின்போது, பார்லிமென்ட் நோக்கி பேரணி நடத்துவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement