சென்னை : தமிழகத்தில் இதுவரை, கொரோனா தொற்றால், 30 ஆயிரத்து, 127 சிறார்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சுகாதாரத்துறை வெளியிட்உள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 253 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 55 ஆயிரத்து, 919 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில், 157 பேர்; கோவையில், 56 பேர் என, மாநிலம் முழுதும், 540 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை, 1.56 கோடி மாதிரிகள் பரிசோதனையில், எட்டு லட்சத்து, 35 ஆயிரத்து, 280 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதில், 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், 30 ஆயிரத்து, 127 பேர்; 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், ஒரு லட்சத்து, 11 ஆயிரத்து, 570 பேர். சிகிச்சை பெற்றவர்களில், 627 பேர் குணமடைந்துள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து, எட்டு லட்சத்து, 18 ஆயிரத்து, 147 பேர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். தற்போது, சென்னையில், 1,634; கோவையில், 465; செங்கல்பட்டில், 391 என, 4,813 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்றால், நேற்று நான்கு பேர் உட்பட, இதுவரை, 12 ஆயிரத்து, 320 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE