புதுடில்லி: குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி, குஜராத்தின் ஜாம்நகர் அரச குடும்பத்தினர் பரிசளித்த தலைப்பாகை அணிந்து வந்தார். .
பிரதமர் மோடி முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது, விதவிதமான தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், குஜராத்தில் உள்ள ஜாம்நகர் அரச குடும்பத்தினர் பரிசாக அளித்த தலைப்பாகையுடன் பிரதமர் பங்கேற்றார். அதே தலைப்பாகையுடன், போர் நினைவிடத்தில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE