புதுடில்லி: 14வது ஐ.பி.எல்., சீசனுக்கான வீரர்கள் ஏலம், பிப்.,18ல் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் 'கொரோனா' காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நடக்கவுள்ள 14வது ஐ.பி.எல்., சீசன் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இது, வரும் பிப்.,18ல் நடத்தப்படும் என்று பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில், 8 அணிகள் சார்பில் தக்கவைத்துக் கொண்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. வரும் பிப். 4ம் தேதிக்குள் வீரர்களை 'டிரேடு' முறையில் மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் வீரர்களுக்கான 'மினி' ஏலம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 57 வீரர்கள் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம், வரும் பிப்.,18ம் தேதி சென்னையில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE