கோல்கட்டா: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பி.சி.சி.ஐ., எனப்படும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு, 48, கடந்த 2ம் தேதி லேசான மாரடைப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவ மனையில், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இருதயத்தில் உள்ள இரு அடைப்புகளை, 'ஆஞ்சியோபிளாஸ்டி' எனப்படும், இருதய அடைப்பை நீக்கும் சிகிச்சை அடிப்படையில் டாக்டர்கள் அகற்றினர்.

பின்னர் உடல்நிலை தேறிய கங்குலி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். இந்நிலையில், இன்று (ஜன.,27) மீண்டும் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE