புதுடில்லி: தியேட்டர்களில் 50 சதவீத்திற்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
![]()
|
இந்நிலையில் நாடு முழுவதும் வரும் பிப்.,28 ம் தேதி வரையிலான நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு குறித்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது: தியேட்டர்களில் 50 சதவீத்திற்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். கொரோனா கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement