சென்னை:பா.ஜ.,வில் இருந்து விலகி, ரஜினியிடம் சென்ற அர்ஜுன மூர்த்தி, புதிய கட்சி துவக்க திட்டமிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:ரஜினி என்னை, நாட்டிற்கு அறிமுகம் செய்தது, அனைவரும் அறிந்ததே. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பி, என்னை நாட்டிற்கு அறிமுகம் செய்தவரின் பாதம் தொட்டு வணங்கி, நான் மாற்றத்தின் வழியில் பயணித்து, நல்லதொரு மாற்றத்தை தருவேன் என, நம்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
அவர், ரஜினி ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து, அரசியல் கட்சி துவங்க, ஆலோசனை செய்துள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பை, இன்று வெளியிடுவார் என்றும், தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE