சென்னை : தமிழக அரசின் தலைமை செயலராக, ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகத்தின், பதவி நீட்டிப்பு காலம் வரும், 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய தலைமை செயலராக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹன்ஸ் ராஜ்வர்மா உட்பட பலர், முயற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசு பணியில் இருந்த, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜிவ் ரஞ்சன், அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில பணிக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் செப்டம்பரில், ஓய்வு பெற உள்ளார்.

இந்நிலையில், அவரை தலைமை செயலராக நியமிப்பதற்காக, மத்திய அரசு பணியிலிருந்து விடுவிக்க, முதல்வர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அவர் முதல்வர் பொறுப்பில் உள்ள, நெடுஞ்சாலைத்துறை செயலராக, நீண்ட காலம் பணியாற்றியவர்.புதிய தலைமை செயலர் குறித்த அறிவிப்பு, இன்று அல்லது நாளை வெளியாகலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE