பொருளாதாரம் மீண்டு வருகிறது: நிர்மலா சீதாராமன்
பொருளாதாரம் மீண்டு வருகிறது: நிர்மலா சீதாராமன்

பொருளாதாரம் மீண்டு வருகிறது: நிர்மலா சீதாராமன்

Updated : பிப் 01, 2021 | Added : பிப் 01, 2021 | கருத்துகள் (52) | |
Advertisement
புதுடில்லி: சுயசார்பு இந்தியா திட்டம் மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் பொருளாதாரம் மீண்டு வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.2021 - 2022 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: போதும் இல்லாத சூழலில் பட்ஜெட் தாக்கல் செய்கிறேன். கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே பட்ஜெட்

புதுடில்லி: சுயசார்பு இந்தியா திட்டம் மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் பொருளாதாரம் மீண்டு வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



latest tamil news

2021 - 2022 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: போதும் இல்லாத சூழலில் பட்ஜெட் தாக்கல் செய்கிறேன். கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத நோய் தொற்று காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் ஏழைகள் பாதிக்கப்படாமல் இருக்க, ஏழைகள் நலவாழ்வு நிதி உதவி திட்டத்தை பிரதமர் துவக்கினார்.


பொது விநியோக திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்திருந்தால், கொரோனாவால் மிகப்பெரிய சேதத்தை சந்திக்க நேர்ந்திருக்கும். உலகில், கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி.



latest tamil news

\



மேலும் கொரோனா தடுப்பபூசிகள்


கொரோனா காலத்தில் கடினமான சூழலை எதிர்கொள்ள சுயசார்பு திட்டத்தை பிரதமர் அறிவித்தார்.கொரோனாவுக்கு எதிராக இந்திய மட்டுமே இரண்டு தடுப்பூசிகளை விரைவாக கொண்டு வந்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 தடுப்பூசிகள் வர உள்ளது. பொருளாதாரத்தை நிலைநிறுத்த 5 மினி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டம், சரிவில் இருந்து மீள உதவும். ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. கொரோனா காலத்தில் 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். புதிய தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.




சுயசார்பு இந்தியா திட்டம்



சுயசார்பு இந்தியா திட்டம் 5 மினி பட்ஜெட்களுக்கு சமமானது. இந்த திட்டம் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பொருளாதாரம் மீண்டு வருகிறது. பொருளாதாரம் வளர்வதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் அரசு பயன்படுத்தி வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.27.1 லட்சம் கோடி அளவுக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டம் என்பது இந்தியாவிற்கு புதிதல்ல. பழங்காலத்தில் இந்தியா சுயசார்பு பெற்ற நாடாக இருந்தது. சுயசார்பு இந்தியா திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (52)

Rajamsam - Jeddah,சவுதி அரேபியா
02-பிப்-202112:27:52 IST Report Abuse
Rajamsam கண்டிப்பாக உண்மையை மறைக்கவே முடியாது .. பெட்ரோல் ,டீசல் ,கேஸ் விலைகள் மீண்டும் மீண்டும் நீண்டு விலை வளர்ச்சியால் பொருளாதாரம் மீண்டு விடும்
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
01-பிப்-202123:54:25 IST Report Abuse
அறவோன் கொரோனா பெயரில் மக்களிடம் அடித்த லட்சக்கணக்கான கோடிகள் எங்கே போனது, என்ன ஆனது ?
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
01-பிப்-202120:53:54 IST Report Abuse
A.George Alphonse மாண்டுபோன பொருளாதாரம் மீண்டு வருகிறதா? இவரின் பேச்சு நகைப்பாகவும்,வியப்பாகவும் இருக்கிறது.இவர் அல்வா கிண்டும் போதே தெரிந்தது.நமக்கெல்லாம் அல்வா கொடுக்கப்போகிறாருன்னு
Rate this:
Balaji - Chennai,இந்தியா
01-பிப்-202121:06:11 IST Report Abuse
Balajiபொருளாதாரம் மாண்டது.. இதற்க்கு அர்த்தம் சொல்லமுடியுமா பெரியவரே... உங்கள் கூற்றுப்படி என்ன காரணங்களால் பொருளாதாரம் மாண்டது என்று ஆதாரத்துடன் விவரியுங்களேன்......
Rate this:
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
02-பிப்-202100:59:39 IST Report Abuse
iconoclastபடேல் சிலை நிறுவும் பொழுது, புதிய நாடாளுமன்றம், எட்டு மாதத்திற்கு முன்னாள் -23.9 சதவிகிதம் ஜீ டீ பீ வளர்ச்சி இந்த பட்ஜெட்டில் உடனே எவ்வாறு வளர்ச்சி கண்டது ?...
Rate this:
Raman - kottambatti,இந்தியா
02-பிப்-202106:03:38 IST Report Abuse
Ramanநீ முதலில் பொருளாதாரம் மீண்டதற்கு விளக்கம் கொடு. பிறகு நீயே தெரிந்துகொள்வாய் பொருளாதாரம் மீண்டதா மாண்டதா என்று...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X