திருத்தணி:''தே.மு.தி.க., இடம் பெறும் கூட்டணி தான், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்,'' என, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தே.மு.தி.க., செயலர் டி.கிருஷ்ணமூர்த்தியின் இளைய மகன் பிரதாப் - ரம்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேசியதாவது:வரும் சட்டசபை தேர்தலில், திருத்தணி தொகுதியை கேட்டு பெறுவோம்; வெற்றி பெறுவோம்.
திருவள்ளூர் மாவட்டம், தே.மு.தி.க., வின் கோட்டை. என்னை வரவேற்க தொண்டர்கள் குவிந்துள்ளதை பார்க்கும் போது, தே.மு.தி.க., கட்சிக்கு நிகர், தே.மு.தி.க., தான் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.தே.மு.தி.க., இடம்பெறும் கூட்டணி தான், தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். விஜயகாந்த் நன்றாக உள்ளார்; நிச்சயம் பிரசாரத்திற்கு வருவார். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE