சென்னை: மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை ஏற்றமானது, மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மானியமில்லா சமையல் காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த பிப்.,4ம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது ஒரு காஸ் சிலிண்டர் விலை ரூ.785 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவு: பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75 உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE