நாம் இருவர், நமக்கு இருவர் ஸ்லோகத்தை ராகுல் விளம்பர படுத்த விரும்பினால், முதலில் திருமணம் செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் அத்வாலே தெரிவித்துள்ளார்.

காங். முன்னாள் தலைவரும், லோக்சபா எம்.பி.யுமான ராகுல் வேளாண் சட்டங்கள், பட்ஜெட் குறித்து லோக்சபையில் பேசும்போது, நாம் இருவர் நமக்கு இருவர் என்ற பாணியில் இந்தியாவை 4 பேர்தான் வழி நடத்துகின்றனர் என கடுமையாக கூறியிருந்தார்.

ராகுல் விமர்சனம் குறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து தெரிவித்துள்ளதாவது: '' நாம் இருவர், நமக்கு இருவர் என்ற ஸ்லோகம் முன்னதாக குடும்ப கட்டுப்பாடு திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டது. ராகுல் அதை விளம்பர படுத்த நினைத்தால், அவர் முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர் தலித் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, சாதியை ஒழிக்கும் மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்ற வேண்டும். இளைஞர்களை ஊக்குவிக்க இதை பயன்படுத்தலாம்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE