மதுரை: கடைகள் மற்றும் மார்க்கெட்களில் பொது மக்கள், ஓசியாக வாங்கும் கறிவேப்பிலை விலை, மதுரையில், கிலோ ரூ.100 ஐ தாண்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விரைவில் ரூ.100 ஐ தொடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருகிறது.

இதற்கு கறிவேப்பிலையும் தப்பவில்லை. அதன் விலையும் ரூ.100 ஐ தொட்டுள்ளது. கடைகளில் இலவசமாக வாங்கும் கறிவேப்பிலையின் விலை உயர்வு சாமான்ய மக்களை கவலையடைய வைத்துள்ளது. கருவேப்பிலையுடன் இலவசமாக வாங்கப்படும் கொத்தமல்லியும் ஒரு கட்டு ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே ரீதியில் சென்றால், கறிவேப்பிலையை இனி சாமான்ய மக்கள் கண்ணில் பார்க்க முடியாது என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE