மும்பை : 'காங்., மிரட்டலுக்கு எதிராக, இந்த தேசமே, அமிதாப் பச்சன், அக் ஷய் குமார் ஆகியோருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்' என, பா.ஜ., தெரிவித்து உள்ளது.
எச்சரிக்கை
மஹாராஷ்டிராவில், காங்., மாநில தலைவர் நானா படேல் பேசும்போது, 'முந்தைய காங்., ஆட்சியில், பெட்ரோல் விலை ஏறும் போது, அரசுக்கு எதிராக குரல் கொடுத்த அமிதாப், அக் ஷய் குமார் ஆகியோர், தற்போதைய பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக குரல் கொடுக்காமல் உள்ளது ஏன்' என, கேள்வி எழுப்பிஉள்ளார்.

மேலும், 'பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அறிக்கை வெளியிடாவிட்டால், அமிதாப், அக் ஷய் ஆகியோரின் படப்பிடிப்புகளை நடத்த விடமாட்டோம்; அவர்களின் படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என்றும் எச்சரித்துள்ளார்.
இது குறித்து, மஹாராஷ்டிர மாநில, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராம் கதம் கூறியதாவது: காங்., தலைவர்கள், நடிகர்களை மிரட்டுகின்றனர். அவர்களின் படங்களை திரையிட மாட்டோம் என்கின்றனர். அமிதாப் என்ன குற்றம் செய்தார்.
துணை நிற்கும்
அவர் நாட்டிற்கு ஆதரவாக, 'டுவிட்டரில்' செய்தி வெளியிட்டார். அமிதாப், அக் ஷய் ஆகியோருக்கு இந்த தேசமே திரண்டு துணை நிற்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE