திருப்பூர்:திருப்பூர் ஒன்றியம், முதலிபாளையம் ஊராட்சி, மானுார் நெல்லியந்தோட்டம் பகுதியில் வசிப்பவர் நடராஜ், 78; விவசாயி.நேற்று அதிகாலை துாங்கி கொண்டிருந்த போது, வாசலில் இருந்து சிலர் அழைத்துள்ளனர். கதவை திறந்து பார்த்த போது, கத்தியை காட்டி மிரட்டி, நடராஜ் அணிந்திருந்த மோதிரம் மற்றும் வீட்டில் இருந்த, 74 ஆயிரம் ரூபாயை திருடிவிட்டு ஓடிவிட்டனர். முகமூடி அணிந்திருந்ததால், அடையாளம் காண முடியவில்லை. ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் விசாரித்து வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE