கம்பம் - சட்டசபை தேர்தலில் ஜாக்டோ ஜியோவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள அரசியல் கட்சிகள் உற்றுநோக்கி வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்ந்து 'ஜாக்டோ ஜியோ' அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஜாக்டோ ஜியோவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அமைப்பின் நிர்வாகிகளின் பேச்சுக்களை உற்று நோக்கி வருகின்றன. அரசு ஊழியர் சங்கங்களில் இடதுசாரிகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தருவார்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதை முறியடிக்க ஆளும் தரப்பு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தி.மு.க. மற்றும் ஆளும் கட்சி சார்பில் 'ஜாக்டோ- ஜியோ' மாநில நிர்வாகிகளுடன் பேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE