ஆண்டிபட்டி - வெயிலின் தாக்கம் துவங்கியதால் வருஷநாடு மலைப்பகுதியில் இருந்து வைகை அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை வருஷநாடு மலைப்பகுதியில் இருந்து உற்பத்தியாகும் மூல வைகை ஆற்றில் மழைக்காலத்தில் அதிக நீர் வரத்து ஏற்படும். ஜனவரியில் பெய்த மழையால் கிடைத்த நீர் ஆற்றின் வழியாக வைகை அணைக்கு வருகிறது. மழை, பனி காலத்திற்குப்பின் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் துவங்கி உள்ளது. இதனால் ஆற்றில் வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைகிறது. வருஷநாடு ஆற்றில் வரும் நீர் அம்மச்சியாபுரம், குன்னுார் வழியாக வைகை அணைக்கு செல்லும். நீர் வரத்து குறைந்ததால் அம்மச்சியாபுரத்தில் வைகை ஆறு கால்வாய் போல் சுருங்கி உள்ளது. ---
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE