வால்பாறை:பழைய வால்பாறை எஸ்டேட்டை சேர்ந்தவர் ஜெகன், எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியில் எஸ்டேட் தொழிலாளியாக வேலை செய்பவர் ஜெயராஜ்,45. இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஜெகன் மனைவியிடம் பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில், பண பிரச்னை தொடர்பாக, ஜெகன், ஜெயராஜ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயராஜ், இரும்பு கம்பியால் ஜெகனை தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தலையில் படுகாயமடைந்த ஜெகன், வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயராஜை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE