தேனி: மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 6 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். புதிதாக 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பரிசோதனைக்காக 436 பேரிடம் சளி, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவை அரசு மருத்துவக் கல்லுாரி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. நேற்று கொரோனாவுக்கான முதல் டோஸ் 103 பேருக்கு செலுத்தப்பட்டது. இதுவரை 3333 பேர் செலுத்தியுள்ளனர். இரண்டாவது டோஸ் நேற்று 90 பேருக்கு செலுத்தப்பட்டது. இதுவரை 338 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE