புதுடில்லி:உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'ஹெலினா' மற்றும் 'துருவஸ்த்ரா' ஆகிய இரண்டு பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.
டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால், 'ஹெலினா, துருவஸ்தா' என்ற இரண்டு பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டன. ஹெலினா ராணுவத்துக்கும், துருவஸ்த்ரா விமானப்படை பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப் பட்டன.
மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளான இவை, ராஜஸ்தானின் பொக்ரான் பாலைவனத்தில் நேற்று சோதிக்கப்பட்டன.நவீன இலகுரக ஹெலிகாப்டரில் இருந்து, ஐந்துக்கும் மேற்பட்ட வகைகளில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை, வெற்றி பெற்றதாக, ராணுவ அமைச்சகம் அறிவித்தது.ஏவுகணைகளை தயாரித்த, டி.ஆர்.டி.ஓ., மற்றும் அதை வெற்றிகரமாக பரிசோதித்த, ராணுவம் மற்றும் விமானப் படையினருக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE