ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கடந்த, 11ம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் குண்டம் திருவிழா துவங்கியது. வரும், 24ம் தேதி நள்ளிரவு மயான பூஜை, 27ம் தேதி காலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. குண்டம் திருவிழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் பக்தர்கள், தீர்த்தம் எடுத்து, பூவோடு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். நேற்று முதல், பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். 21ம் தேதி முதல், ஆனைமலை பகுதிகளிலுள்ள கோவில்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE