கூடலுார்:மசினகுடி அருகே, காட்டுயானை காதில் தீ வைத்தது தொடர்பாக, கைது செய்யப்பட்டவர்களுக்கு, மார்ச், 5ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனபகுதியில், முதுகில் காயத்துடன் சிரமப்பட்டு வந்த காட்டு யானை ஜன., 19ல் உயிரிழந்தது.அதன், காதில் தீக்காயம் ஏற்படுத்திய மாவனநல்லா பகுதியை சேர்ந்த தனியார் விடுதி உரிமையாளர் மகன் ரேமண்ட், 28, மசினகுடியை சேர்ந்த பிரசாத், 36, ஆகியோரை, கைது செய்து, குன்னுார் கிளை சிறையில் அடைத்தனர்.மீண்டும், 5ம் தேதி, கூடலுார் மாஜிஸ்ட்ரேட் முன் அவர்களை ஆஜர்படுத்தப்பட்ட போது, 19ம் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டது. காவல் முடிந்த நிலையில், இருவரையும் வனத்துறையினர் நேற்று, கூடலுார் மாஜிஸ்திரேட் பாபு முன் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு, மார்ச், 5ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE