திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லுாரி நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தணிக்கையாளர் ராசேந்திரன் வரவேற்றார். மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் நடராஜன், முத்துவேலு முன்னிலை வகித்தனர்.'புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் 5 சதவீதம் என 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்க வேண்டும். ஓய்வூதியத்திற்கு வருமான வரி பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும்' உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் பொன்ராஜ் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE