ஊட்டி:''பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, புதிய எஸ்.பி., பாண்டியராஜன் தெரிவித்தார்.நீலகிரி மாவட்ட எஸ்.பி., யாக இருந்த சசிமோகன் மாற்றப்பட்டு, புதிய எஸ்.பி., யாக பாண்டியராஜன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவர், நிருபர்களிடம் கூறுகையில், ''நீலகிரியில், சட்டம் ஒழுங்கு பிரச்னை திறம்பட மேற்கொள்ளப்படும். இரவு ரோந்து பணி பலப்படுத்தப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோடை கால சீசனுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும் 'பார்க்கிங்' வசதிகள் ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE