ஊட்டி:ஊட்டி நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக கோவிந்தராஜ் பணிபுரிந்து வருகிறார். இவர் தலைமையில், துாய்மை பணியாளர்கள், மேல் தலையாட்டு மந்து பகுதியில் துப்புரவு பணி மேற்கொண்டனர், அங்கு, ஒரு கடை முன் குப்பை கொட்டி அசுத்தம் செய்தனர். 'இங்கு குப்பை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவித்துள்ளார்.அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், துாய்மை பணியாளர்களை பணி செய்ய விடாமல், மேற்பார்வையாளர் கோவிந்தராஜனை தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்டித்து, நகராட்சி துாய்மை பணியாளர்கள் நேற்று மாலை, ஊட்டி பி1 போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE