ஊட்டி:கோடநாடு வழக்கில், மூன்று பேரிடம் குறுக்கு விசாரணை நடந்தது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக எஸ்டேட்டில் பணிபுரிந்த, மூன்று பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு முடிக்கப்பட்டது.நேற்று, வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் உட்பட, நான்கு பேர் ஆஜராகினர். ஊட்டி லாட்ஜ் உரிமையாளர் சாந்தா, ஊழியர் பிரதீஷ், குற்றம் சாட்டப்பட்ட ஜித்தின் ஜாயின் உறவினர் ஷாஜி ஆகிய மூவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.வழக்கை நீதிபதி அருணாச்சலம் பிப்., 23க்கு ஒத்தி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE