கோவையில், ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், எச்.ஐ.எச்.எஸ்., காலனி பாலம் பிரச்னைக்கு, அனைத்து தரப்பிலும் பேச்சு நடத்தி, தீர்வு காண்போம்.கோவை தொழில் நகரம். மத்திய அரசின் தவறான கொள்கையால், தொழில்கள் முடங்கியிருக்கின்றன. பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இப்பிரச்னையில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.பாரதியார் பல்கலை கட்டுவதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு, சட்டப்படி, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த முறையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். சிலம்பக்கலையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல, தேவையான நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE