கோவை மாவட்டம், காரமடையில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில், ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.சமையலில் பயன்படுத்தும் கறிவேப்பிலையை, சாப்பிட்ட பின், கண்டுகொள்வதில்லை. அதுமாதிரி தான் அ.தி.மு.க., அரசு, இங்கு கறிவேப்பிலை ஆலை அமைப்பது குறித்து, கண்டுகொள்ளவில்லை.நீலகிரியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கும், தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்கவும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலாவை மேம்படுத்த, சிறப்பு திட்டங்கள் தயாரிக்கப்படும்.கடந்த, 10 ஆண்டுகளில் அ.தி.மு.க., அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முதல்வர் பழனிசாமி, மத்திய அரசிடம் தமிழகத்தின் உரிமையை அடமானம் வைத்து, தனது பதவியை தக்க வைத்து வருகிறார்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE