கடலுார்:'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி உடலை, மூன்றாவது நாளாக, உறவினர்கள் வாங்க மறுத்து வருவதால், பதற்றமான சூழல் தொடர்கிறது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர், சுப்புராயலு நகரைச் சேர்ந்தவர் ரவுடி வீராங்கன், 32; கடந்த, 16ம் தேதி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்து தப்பிய ரவுடி கிருஷ்ணன், 30; பண்ருட்டி அருகே, போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கிருஷ்ணன் உடல், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்யபட்டது.
என்கவுன்டர் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, கலெக்டரிடம் மனு அளித்தனர். மூன்றாம் நாளாக நேற்றும் உடலை வாங்க, உறவினர்கள் மறுத்து விட்டனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையில், வீராங்கன் கொலை தொடர்பாக, 10 பேர் மீது திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, நான்கு பேரை கைது செய்தனர். கிருஷ்ணனை தவிர்த்து, தலைமறைவான ஐந்து பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இதில், 20 - 30 வயதுள்ள மூன்று பேர், நேற்று விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE