கள்ளக்குறிச்சி:சங்கராபுரத்தில், போலி டாக்டர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் போலி டாக்டர்கள், ஆங்கில வைத்தியம் பார்ப்பதாக, விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.சுகாதார அதிகாரிகள், சங்கராபுரம் அரசு மருத்துவமனை முன், சூரியா கிளினிக் நடத்தி வந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாட்ரம் பிஸ்வாஸ், 34, என்பவரின் கிளினிக்கில் சோதனை நடத்தினர். இதில் பிளஸ் 2 படித்து, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது.
இதேபோல், சங்கராபுரம் கடைவீதியில் உள்ள அருண் மெடிக்கல் மாடியில், அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், அதன் உரிமையாளர் வெங்கடேசன், 53, பிளஸ் 2 படித்து, ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. சுகாதார அதிகாரிகள் புகாரின்படி, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE