மதுரை:மதுரை, மானகிரி கதிரவன் என்பவர் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
என் தந்தை வேல்முருகன், மதுரை கலெக்டர் அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மைப் பணியாளராக வேலை செய்தார். பிப்., 17ல், கலெக்டர் அலுவலக வளாகத்தில், துாக்கில் பிணமாக தொங்கினார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது. சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டார்.
நீதிபதி ஆர்.ஹேமலதா, ''ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை, மதுரை அரசு மருத்துவமனை டீன் பிப்., 23ல் தாக்கல் செய்ய வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE