வத்தலக்குண்டு:கள்ளக்காதலியை கொலை செய்த காதலன், விஷம் குடித்து உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மனைவி ரதிதேவி, 38. இவர், 100 நாள் வேலைத் திட்டத்தில், பொறுப்பாளராக இருந்தார். குரும்பபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ், 32. இவர், ஒன்றிய பணிகளை போட்டோ எடுத்து வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம், கள்ளக்காதலாக மாறியது.
இப்பிரச்னை, சுரேஷின் மனைவிக்கு தெரிந்ததால், அவர் தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். இந்நிலையில் நேற்று, ரதிதேவி - சுரேஷ் இடையே தகராறு ஏற்பட்டது.சுரேஷ், கல்லால் ரதிதேவியை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த ரதிதேவி, தேனி மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் இறந்தார். தப்பி ஓடிய சுரேஷ், குரும்பபட்டி கண்மாயில் விஷம் குடித்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE