வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு அருகே கள்ளக்காதலியை கொலை செய்த காதலன், விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மனைவி ரதிதேவி 38. இவர் நுாறு நாள் வேலைத்திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக இருந்தார். குரும்பபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் 32. இவர் ஒன்றிய பணிகளை போட்டோ எடுத்து வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
இப்பிரச்னை சுரேஷின் மனைவிக்கு தெரிந்ததால், அவர் தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். நேற்று ரதிதேவியின் கணவர் பொன்ராஜ் வெளியூர் சென்றதால் ரதிதேவியும், சுரேஷூம், வத்தலக்குண்டு அருகே வெறியப்பநாயக்கன்பட்டிக்குச் சென்றனர். அங்கு அவர்களுக்குள் தகராறு எழுந்தது.சுரேஷ் கல்லால் ரதி தேவியை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
காயமடைந்த ரதிதேவி தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். கூடுதல் எஸ்.பி., இனிகோ திவ்யன் ஆய்வு செய்தார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தப்பி ஓடிய சுரேஷ் குரும்பபட்டி கண்மாயில் விஷம் குடித்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE