பாகூர், : பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, மா. கம்யூ., சார்பில் பாகூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மா.கம்யூ., பாகூர், நெட்டப்பாக்கம் கொம்யூன் கமிட்டி சார்பில், பாகூர் சிவன் கோவில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கொம்யூன் செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர்கள் சரவணன், இளவரசி, சண்முகம், முத்துலிங்கம், செல்வராசு, அரிதாஸ் முன்னிலை வகித்தனர்.பாகூர் மாட வீதிகளில் பேரணியாக சென்று, பாகூர் சிவன் கோவில் அருகே, பைக், மற்றும் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து, மண் அடுப்பில் விறகு வைத்து தீ மூட்டி, பெட்ரோல் பொருட்களின் விலையை குறைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கனுாரில் நடந்த தெருமுனை பிரசாரத்திற்கு மா.கம்யூ., கொம்யூன் செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி பேசினர். நிர்வாகிகள் முத்து, ரகுநாத், சுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மதகடிப்பட்டில் துவங்கிய தெருமுனை பிரசாரம் திருக்கனுாரில் முடிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE