புதுச்சேரி, : அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில் தேசிய செயற்குழு கூட்டம் புதுச்சேரி தனியார் ஹோட்டலில் நடந்தது.
ஒருமைப்பாட்டு கழக பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் அருண்குமார், பல்லாப்ஷான் குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணை பொதுச் செயலாளர் ஹார்ஷன் சிங், துணைத் தலைவர் சதாசீவ், புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் ஜீவானந்தம், பொருளாளர் சம்பத், பேராசிரியர் வாசுகி, முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., பேசுகையில், பொது சுகாதாரத்திற்கு மேலும் நிதி ஒதுக்க வேண்டும்.
கொரோனா நோய் எதிர்ப்பு மருந்து பரிசோதனை விவரங்களை மக்களுக்கு தெரிவித்து இலவசமாக விநியோகிக்க வேண்டும். விவசாய சட்டம், மின்சார சட்டத்தை திரும்ப பெற வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE