புதுச்சேரி, : புதுச்சேரி சட்டசபை நாளை மறுநாள் காலை 10:00 மணிக்கு கூடுகிறது.
புதுச்சேரியில் வரும் 22ம் தேதி (நாளை மறுநாள்) சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டுமென முதல்வர் நாராயணசாமிக்கு, கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அதற்கான நடவடிக்கைகளில் சட்டசபை செயலகம் தீவிரமாக இறங்கியுள்ளது. சட்டசபை வளாகத்தை திறந்து சுத்தம் செய்வது, மைக்குகளை தயார் செய்வது உள்ளிட்ட பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, திங்கள்கிழமை(22ம் தேதி) காலை 10:00 சட்டசபை கூடுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று(20ம் தேதி) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE