புதுச்சேரி : கவர்னர் மாளிகையை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு வேலிகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன.
கிரண்பேடியை கண்டித்து காங்., கட்சி போராட்டம் அறிவித்ததால், கடந்த ஜனவரி 5ம் தேதி, கவர்னர் மாளிகையை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. கிரண்பேடி கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திர ராஜனுக்கு, புதுச்சேரி கவர்னர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.நேற்று முன்தினம் பொறுப்பேற்ற தமிழிசை சவுந்திரராஜன், தனது மாளிகையை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் அகற்றப்படும் என அறிவித்தார்.
நேற்று காலை, கவர்னர் மாளிகையை சுற்றி அமைத்திருந்த தடுப்புகள் அதிரடியாக அகற்றப் பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது. ஓரிரு உள்ளூர் போலீசார் மட்டுமே கவர்னர் மாளிகை அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடுப்பு வேலி, மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்பு என பதற்றத்துடன் காணப்பட்ட கவர்னர் மாளிகை சுற்று பகுதி, நேற்றுசாதாரண நிலைக்கு திரும்பியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE