செஞ்சி, : வீரணாமூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் சண்முகம் திறந்து வைத்தார்.
வல்லம் ஒன்றியம் வீரணாமூர் கிராமத்தில் மேல்சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா.பி.சிங் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் துரியோதனன்வரவேற்றார்.அமைச்சர் சண்முகம் மினி கிளினிக்கை திறந்து வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
அ.தி.மு.க., வல்லம் தெற்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, பி.டி.ஓ., குலோத்துங்கன், டாக்டர்கள் சந்தோஷ், குணா, பேரவை ஒன்றிய செயலாளர்கள் பன்னீர் செல்வம், மனோகரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி தலைவர் சுகுமார், இளைஞரணி மாவட்ட பொருளாளர் சகாதேவன், ஒன்றிய மகளிரணி இணை செயலாளர் சசிகலா சகாதேவன், ஒன்றிய செயலாளர்கள் மாணவரணி பாலமுருகன், பாசறை பூபதி, தகவல் தொழில் நுட்ப பிரிவு சம்பத்குமார், ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் வெங்கடேசன், துணை தலைவர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் கல்ராயன், இலக்கியஅணி செயலாளர் ராஜ்குமார், மாணவரணி தலைவர் புருஷோத்தமன், இணை செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE