விழுப்புரம் : வரதட்சணை கேட்டு மனைவியை மிரட்டிய கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் விராட்டிக்குப்பம் ரோட்டை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி விஜயலட்சுமி,28; இவர்களுக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணமானது. ரவிக்குமார், கல்பாக்கம் அனுமின் நிலையத்தில், பணிபுரிந்து வருகின்றார்.திருமணத்தின்போது விஜயலட்சுமியின் பெற்றோர், 18 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை சீர் வரிசையாக கொடுத்தார்.இந்நிலையில், மேலும் வரதட்சணை கேட்டு, ரவிக்குமார் மற்றும் அவரது தந்தை பாலசுந்தரம், தாய் கனகலட்சுமி, உறவினர்கள் அரிசங்கர் மனைவி சசிகலா, பழனியப்பன் மனைவி சத்யா ஆகியோர் சேர்ந்து விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து, தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.
இது குறித்த புகாரின்பேரில், ரவிக்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE