புதுச்சேரி : புதுச்சேரியில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; 34 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.
புதுச்சேரியில் 11, காரைக்காலில் 1, மாகியில் 2 என, மொத்தம் 14 பேருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 39 ஆயிரத்து 540 ஆக உயர்ந்துள்ளது.ஒரே நாளில் 34 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். மீண்டவர் களின் மொத்த எண் ணிக்கை 38 ஆயிரத்து 701 ஆக அதிகரித்துள்ளது.புதுச்சேரி பகுதியை சேர்ந்த 2 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE