விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட குழு தலைவர் ரவிக்குமார் எம்.பி., இணை தலைவர் விஷ்ணுபிரசாத் எம்.பி., ஆகியோர் தலைமை தாங்கினர்.கூட்டத்தில், மத்திய அரசால் ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம், தேசிய சமூக பாதுகாப்பு திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தனர்.அப்போது, கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மஸ்தான் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE