பாகூர் : கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி எதிரே குப்பைகள் குவிந்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் அரசு துவக்கப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.இப்பள்ளி எதிரே பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் வைத்திருந்த குப்பை தொட்டி உடைந்து சேதமானதால் புதிதாக வைத்தனர்.குப்பைகளை தினம் அகற்றுவதில்லை. சாலையில் சிதறியுள்ள குப்பைகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டு ஏற்பட்டு, மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.குப்பைகளில் பிளாஸ்டிக் கவர்களில் கிடக்கும் உணவு பொருட்களை கால்நடைகள் கிளறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி எதிரே குவிந்து கிடக்கும் குப்பைகளை தினமும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE