புதுச்சேரி : அனைத்து சுகாதார பிரிவு ஊழியர்களும் வரும் 22ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்
.புதுச்சேரி சுகாதாரத் துறையில் 650க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 137 பணியிடங்களை நிரப்ப கோப்பு அனுப்பியும் நிரப்பவில்லை. இதனால் காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளுக்கு மாற்றலாகி சென்ற சுகாதார ஊழியர்கள் மீண்டும் புதுச்சேரி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து வரும் 22ம் தேதி முதல் அனைத்து சுகாதார பிரிவு ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்து காலை 8 மணிக்கு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை எதிரே போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனை ஒருங்கிணைந்த சுகாதார ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE