திருக்கனுார் : திருபுவனை தொகுதி பா.ஜ., சார்பில் தெருமுனைப் பிரசாரம் செல்லிப்பட்டு கிராமத்தில் நடந்தது .
பா.ஜ., பிரமுகர் முத்தழகன் தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் கராத்தே முருகன், வில்லியனுார் மாவட்ட தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் ஆறுமுகம், நாகராஜ், புகழேந்தி, பயிற்சி அணித் தலைவர் பாலாஜி உட்பட பலர் பேசினர்.வரும் சட்ட சபைத் தேர்தலில் பாஜ., அதிக இடங்களில் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் பணி புரிய வலியுறுத்தப்பட்டன. பா.ஜ. பிரமுகர்கள் ரவி, ராஜசேகர், குமார், அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE